ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 62-ஆக உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்க்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் ஆந்திரப் பொது வேலை வாய்ப்பு குறித்து அவசரச் சட்டத்தை வெளியிட்டார்.
அதன்படி, முதல் இந்த சட்டத் திருத்தம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஊழியர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும், மேம்பட்ட சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
Tags:
State News