1ம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் 1ம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.15000 வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. மாணவர்கள் http://scholarship.gov.in என்கிற தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில் தங்களுடைய சேமிப்புக் கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.. விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை தங்களுடைய வங்கி சேமிப்பு கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகை பெற முடியும்.. இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்..
கல்வி நிறுவனங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், http://scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும்.. பின்பு மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.. ஒருவேளை, கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல் அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது. இதற்கான அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.