தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



தமிழகத்தில், கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Public Exam: திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பதால், பெற்றோர்களும், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு, வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

பெரும்பாலும், பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாலும், தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், 5 நாட்கள் அல்லது 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தேர்தல் 19 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை.


வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் 23 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும், வரும் 17 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tamil Infoable News-ன் Latest Updates-க்கு Cilk Here Watsapp Image...

Previous Post Next Post

نموذج الاتصال