திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று மலையேறும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது,
• 2,500 பக்தர்கள் மலை ஏற நிபந்தனைகளுடன் அனுமதி.
• 18-60 வயது உள்ளவர்கள் மட்டுமே அனுமதி.
• கோபுரம் அருகில் உள்ள வழியில் மலை ஏற அனுமதி, மற்ற வழிகளில் மலை ஏற கூடாது.
• மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டிலை தவிர கற்பூரம், பட்டாசுகள் எடுத்து செல்ல அனுமதியில்லை.