தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு...😱

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழ்நாட்டில் ஒரே நாளில் 14,049 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த கொரோனா பாதிப்பு 34,55,613 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து 52 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

இதுவரையில் கொரோனா பாதித்து 38,025 பேர் உயிரிழந்தனர். நேற்று மட்டும் சென்னையில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 100-யைக் கடந்துள்ளது. வட மாநில மாணவர்களால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்த நிலையில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை

نموذج الاتصال