மன நிறைவு அளிக்கும் மனத்திருப்தி


ஒரு மனிதன் மனத்திருப்தியாக வாழ தன் வேலையை சரியாக செய்தலே போதும் மனத்திருப்தியாக வாழலாம் என்பதற்கு நான் படித்த கதை வாயிலாக இக்கட்டுரையில் காண்போம்.

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.
ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கி கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டுசிலைகள் இருந்தன. 
எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.அதைக் கண்ட வழிப் போக்கர் ஒருவர்,
“ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.

கல்தச்சர் சொன்னார்,

“எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்" என்றார்.
வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டுசொன்னார் .
"எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே” அய்யா..

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார்.

“அந்த சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது.”என்றார்.இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்க இருக்கிறீர்கள்?” - வழிப் போக்கர்.

“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” ,,
ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கு அருகில் இருக்கும் இந்தச் சிரிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்களா?” என்ன என்றார் வழிப் போக்கர்.

தனது வேலையை சற்று நிறுத்தி விட்டு வழிப் போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர் சொன்னார்,

“யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள்.

அய்யா,வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்க வில்லை.

சேதம் சிறியதா? , பெரியதா? என்பது பற்றிக் கவலை இல்லை.செய்யும் தொழிலில் பிழை ஏற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”. என்றார் அந்த கல்தச்சர்.

ஆம் நண்பர்களே...

உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வர வேண்டியது இல்லை.
அது தனக்குள்ளேயே இருந்து வர வேண்டும்.
அடுத்தவருக்காக வேலை செய்வதில் கிடைக்கும்
இன்பத்தை விட,,தன் மனத் திருப்திக்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்… என்றும் அடுத்தவருக்காக இது வேற ஒருத்தவர் பயன்படுத்த போகிறார் நமக்கு என்ன என்று மன நோக்கத்தில் வேலை செய்வது விட்டு நாம் நாம் நமக்காக செய்கின்றோம் என்ற உயர்ந்த பண்பு ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்தில் வந்தால் மன திருப்தியாக வாழலாம்.
Previous Post Next Post

نموذج الاتصال